பக்கம்:பொங்கற்பரிசு.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாயெங்கும் வாழ்த்துப்பாவே!

ண்டூத நீள்கழியில்,
தாழையிலே பூமணக்க,
மறிக டல்மேல்
வண்டூதாத் தாமரைப்பூ
பொன்னிதழை மலர்த்தியதே !
வாழ்க ! வாழ்க!
கண்டோடா திருந்திடுமோ,
தமிழ்மகனே! வந்தபகை
வாடைக் காற்றும் ?
கொண்டோம்நாம் பெருமகிழ்ச்சி !
புத்தாண்டைக் கைக்கொண்டோம்!
வளத்தைக் கொண்டோம் !

1


கொல்லையிலே வாழைபலா
மாங்கனிகள் குலுங்கும் ! நீள்
கரும்ப ழைக்கும் !
நெல்லரியோ வந்தகதிர்
நிறங்கண்டு தலேதாழ்த்தும் !
ஊரோ ரத்துக்
கல்லருவி முழவார்க்கும்!
காடெல்லாம் பூச்சிரிக்கும் !

குயில்கள் பாடும் !
5
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/13&oldid=1148983" இலிருந்து மீள்விக்கப்பட்டது