பக்கம்:பொங்கற்பரிசு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உயர்ந்து வாழ்வோம்!


சேலுஞ்செந் தாமரையும் மேற்றிசையிற் காத்திருக்க
நீலவான் பூத்து நிமிர்ந்ததொளி!-கோல
இளம்பரிதி தந்ததை எல்லோரும் பங்காக்கி

உளமொப்பி வாழ்வோம் உயர்ந்து!
1


இத்திங்கள் தைத்திங்கள்! இப்பரிதி பொற்பரிதி!
புத்தாண்டு வந்ததைப் போற்றுவோம்!-எத்திசையும்
தாயகத்தின் மேன்மை, தமிழின் சிறப்போங்க

ஒயா துழைத்துயர் வோம்!
2


இந்நாடோ உன்னாடாம்! இப்பொங்கல் தைப்பொங்கல்!
பொன்னும் பரிதி புதுப்பரிதி!-தென்னவனே!
வாழ்ந்த இனம் மறந்தாயோ? இன்றுனது

தாழ்ந்தநிலை சற்றே நினை!
3


விண்ணை, வெளியை, விரிகடலை, மேற்பரப்பை,
மண்ணைப்பொன் ஆக்கி வரும்பரிதி!-பண்ணார்
தமிழீர்! புதுப்பரிதி தந்ததைத் தேக்கா(து)

அமைய அமையுமே நாடு!
4

33

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/41&oldid=1146859" இலிருந்து மீள்விக்கப்பட்டது