பக்கம்:பொங்கற்பரிசு.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ஊருக்கு வழங்கினார்!

தைபி றந்தது! தைபி றந்தது!மைவிழிப் பெண்கள் மலரைத் தேடிக்
கொய்தார்; கொண்டு வந்து குவித்தார்;
மாவிலை கட்டினார் வாயிற் படிக்கு;
திண்ணை மெழுகினார்; தெருவிளக் கேற்றினார்;5
அருங்கவி போன்ற கரும்பு வைத்தார்;
அடுக்கடுக் காக மஞ்சள் வைத்தார்;
புதிய பானையிற் புதுநெல் அரிசி
இட்டார்; வெல்லக் கட்டியும் இட்டார்!
பொங்கிற்றுப் பானை! பொங்கலோ பொங்கல்!10
திங்கள் முகத்தார், சங்குக் கழுத்தார்,
சிங்கத் தமிழர், தங்கக் குழவிகள்
படையல் இட்டார்! பரிதி வாழ்த்தினார்;
தமிழை வாழ்த்தினார்; 'தமிழ்நாட்டை நாமே
அமைதியாய் அடைவோம்: ஆள்வோம்' என்றார்;15
உண்டார்: களித்தார்: ஊருக்கு
வழங்கினார் பொங்கலை! வாழ்த்தி! னாரே

17


42
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/50&oldid=1148709" இலிருந்து மீள்விக்கப்பட்டது