பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு. கருணாநிதி புறப்படுமாறு விரைவு படுத்தச் சொன்னார். அதனால் ஓடி வந்தேன்! நல்ல நேரத்தில் என்னால் இடையூறு ஏற்பட்டதற்கு மிகவும் வருந்துகிறேன் 44 'பரவாயில்லை! பரவாயில்லை!" எனக் கூறிக் கொண்டே பராக்கிரமன் அவளைப் பார்த்துக் கண் சிமிட்டினான். அவளோ; தனக்கும் வெட்கமும் நாணமும் உண்டு என்பது போல் அழ காய்ச் சிரித்து அளவாய்த் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள். புறப்பட்டுப் போய் விட்டதாக காளியிடம் சொல்லி விடவா?" 16 "ஓ! தாராளமாகச் சொல்லிவிடலாம்! "நீ எப்போதுதான் புறப்படப் போகிறாய்? "விடியற்காலையில்! என்னுடன் இளவரசியையும் அழைத் துச் செல்ல வேண்டாமா? அதனால்தான் தாமதம்!” எந்த இளவரசி? "சோழ நாட்டு இளவரசி! 16 'என்ன; சோழ நாட்டு இளவரசியா? "ஆமாம்! ஆமாம்! 'உறையூர்ச் சோழனின் மகளையா? ஆமாம்; அக்களதேவச் சோழனின் மகளைத்தான்! அந்த இளவரசியைத்தான் குறிப்பிடுகிறேன்!" 317