பக்கம்:பொன் நாணயம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

னிப்பது? நீ என்ன பிழை செய்துவிட்டாய்?' என்று ஆத்திரத்தோடு கேட்டார்.

11

"பிறகு நான் மெதுவாக எழுந்து தேம்பித் தேம்பி அழுதுகொண்டே, 'எசமானரே, அந்தப் பொன் நாணயம் இதோ இருக்கின்றது. நான் இதை நேற்றுக் காலையில் வழியிலே கண்டெடுத்தேன் -- என் பிழையை மன்னிக்க வேண்டும் -- மன்னிக்க வேண்டும்,' என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் தரையில் விழுந்து அவர் காலைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.

என் எசமானர் அப்போது, 'அடே குப்பா, எழுந்திரு; நீ சிறிதும் அஞ்சவேண்டாம்; உன்மேல் ஒன்றும் குற்றம்

43

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/44&oldid=1315889" இலிருந்து மீள்விக்கப்பட்டது