பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என், அண்ணாதுரை இந்த மூவர் அளித்த தீர்ப்பு, மானது. சம்பந்த அவர்களின் பொறுப்பும், கடமையும் அது. அது குறித்து, நாம் ஏதும் கூறுவது கூடாது-தேவையுமில்லை. எட்டும் எட்டும் பத்து என்ற கணக்கு முறையை ஏற்றுக் கொண்டுதான் தீரவேண்டும் என்றால், நாலும் நாலும் எட்டு என்ற உண்மையை நிலைநாட்ட முடியாது ரது. ரூபாய்க்கு 12 அணாதான் என்பதை ஏற்றுக் கொண்டு விட்டால், அரை ரூபாய்க்கு ஆறணாதான் பெற்றுக் கொண்டாக வேண்டும். அதன்படி, இந்தியாவை ஒரே நாடு என்று கருதி, திகாரத்தை கொண்டு, மாகாண சர்க்காரில் குவித்து வைத்துக் சர்க்கார்களைச் சாதாரண. பஞ்சாயத்து போர்டு நிலைமைக்குக் கொண்டுவந்தான பிறகு, சென்னை சர்க்காரின் கம்யூனல் ஜி.ஓ. வை, சட்ட விரோதம் என்று சொல்லும் அதிகாரம், சட்டப்படி எடுபட்டுவிட்டது இந்தப் புதிய சட்டத்தின்படிதான், பாடு பட்டுப் பெற்ற, பலன் தரும் கம்யூனல் ஜி. ஓ.---கல்லறைக்கு இழுத்துச் செல்லப்படுகிறது. கண்ணீர் ஆறு ஓடுகிறது நாட்டிலே-ஆனால் சட்டம் பேசுகிறது-கண்டிப்புடன். டில்லி, சென்னையை இப்படித்தான் ஆட்டி வைக்கும்

என்று சொன்னபோது, கண் சிமிட்டி உதட்டை அசைத்


7