பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு தவர்களின் முகத்திலெல்லாம் அசடு வழியும் படியாகத் தீர்ப்புக் கிடைத்து விட்டது. பார்ப்பனச் சமுதாயத்திலே, வகுப்பு ஆதிக்க வெறிக்குணம் கொண்டவர்களின் பிடிவாதம், வெற்றி பெற்று வீட்டது. பிராமண மாநாடுகளின் தீர்மானப் படி நிலைமை இன்று, வகுப்பு ஆதிக்கக்காரர் கொட்ட மடிக்கும்படி ஆகிவிட்டது. இந்துவும், மித்திரனும் தினமணியும் மற்றும் பல வகுப்புவாத இதழ்களும், பல ஆண்டுகளாகச் செய்துவந்த முயற்சி, முடிவடைந்து வகுப்பு நீதிக்காகப் போராடி, வாதாடியவர்களின் மூக்கு அறுபட்டுவிட்டது. எதிர்காலம் - பயங்கரமானதாகி விட்டது, இடருள்ள வழி,-இருட்டு நேரம்-விளக்கு அணைந்து இதுவே இன்று ஏற்பட்டுள்ள நிலைமை, ந்து சென்னை சர்க்காருக்குத் தோல்வி-திராவிடச் சமு தாயத்துக்கு மானக்கேடான தோல்வி - பார்ப்பனரைத் தூற்றாதே, என்று சமரசம் பேசிய சற்குணவான் களுக்கு வெட்கம். ....அன்று, தியாகரின் கல்லறைமீது, கேலியும் கண்டனமும் சென்று தாக்கிவிட்டன். பட்ட பாடு வீணாகி விட்டது - இனி திறமை என்ற பெயர் கூறிக்கொண்டு ஆதிக்க வகுப்பினர், தமது பிடியைப் பலப்படுத்திக் கொள்வர்.

8


8