பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். அண்ணாதுரை யா - என்ற பட்டப் பெயரைச் சூட்டிக்கொண்டுள்ள வர்களைக் கேட்கிறோம்-பார்த்தீரா! மாகாணத்திலே முப்பது ஆண்டுகளாக இருந்துவரும் முறை - பலப்பல மந்திரிகளால் ஆதரிக்கப்பட்ட முறை - காங்கிரஸ் மந்திரி களாலும் ஆதரிக்கப்பட்ட ற்றிக்கொடி நாட்டிய முறைபையிலே சிறு வகுப்பினரே உள்ள சுயநலக்காரரின் வேலையினால் வீழ்ந்துவிட்டது! இப்போது என்ன சொல்கிறார்கள், சமரசவாதிகள் - எண்ணிக்கையை மட்டும் எண்ணிக் கொண்டு, யார் நம்மை என்ன செய்யமுடியும் என்று இறுமாந்து கிடந்த ஏமாளிகள்! இதோ, கம்யூனல் ஜி.ஓ. சட்டவிரோதம் என்று தீர்ப்பாகிவிட்டது. பின்னணியில் இருக்கிறது-சூழ்நிலை கெட்டுக் கிடக்கிறது- ஆகவேதான், அந்தச் சமூகத்துக்குச் சில சலுகைகள் காட்டுவது நியாயம், என்று பேசினர் அமைச் சர்கள் -- சட்டமோ, அதெல்லாம் எனக்குத் தெரியாது. கம்யூனல் ஜி.ஓ.- சட்டவிரோதம் என்று கூறிவிட்டது. சட்டப்படி செய்யக்கூடியவை, செய்யவேண்டி யதைச் செய்துவிட்டனர் நீதிபதிகள். இதன் பயனாக - இந்தத் தீர்ப்பைச் சாதகமாகக் கொண்டு, வகுப்பு ஆதிக்கக்காரர்கள், சமூக நிதியை அழித்து, சிறுபான்மையினரின் சர்வ பசாவ ஆதிபத்யத்தை நிலைநாட்டப் போகிறார்கள். பழைய நிலை- பார்ப்பன் ஆதிக்கம் - இதோ வந்து கொண்டிருக்கிறது.

11


11