சி. என். அண்ணாதுரை
யம், புதுவேட்டையிலீடுபடும் சமூகத்தின் அமைதிக்கும் கேடுவரக்கூடும்.
காங்கிரஸ் வட்டாரத்துத் தலைவர்கள், திராவிடத் தலைவர்கள் இருக்கும் திக்கு நோக்கி, அபாயச் சங்கு ஊதும் நாள் பிறந்தே தீரும்.
ஜஸ்டிஸ் கட்சியின் திட்டத்தைத் தகர்த்து விட்டதால், மன மகிழ்ச்சி கொள்ளும், சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த, சுயநலக்காரர்கள் வினை விதிக்கிறார்கள்—பலனை இந்தத் தலைமுறையிலேயே காண்பார்கள், வகுப்புகளுக்குள் விரோதம் மூளவும், அதன் பயனாக மக்கள் மனதிலே குமுறல் ஏற்படவும் போகிறது. அறிகுறிகள் இப்போதே, தெரிய ஆரம்பித்துவிட்டன.
ஏகலைவனிடம், 'கட்டை விரலை' வாங்கியாகிவிட்டது—கட்டை விரலை இழந்த ஏகலைவன் வாளாயிருக்கக்கூடும்—ஆனால் அவன் பிறந்த சமூகம் வாளாயிருக்குமா?
ஆதிக்கக்காரர், உடனடி இலாபத்தால் உச்சி குளிர்ந்து விடுகிறார்கள்—எதிர்காலத்தில் எவ்வளவு பெரிய ஆபத்துக்கு அச்சாரம் கொடுத்து விட்டோம், என்பதை அறியாமல்.
கட்டுப்படுத்த முடியாத விதமாக, கயமைத் தனத்தைத் தூப தீப நைவேத்தியம் வைத்து வரவழைத்துக் கொள்ளுகிறார்கள்—எங்கும், சேரன், செங்குட்டுவன்களைக் காணப்போகிறார்கள் — கதர் உடையிலேயே காணப் போகிறார்கள்—வெற்றிக்களிப்பு கருகுவதற்குள்.
13