பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொன் விலங்கு' வாரி முறைக்காக எண்ணற்ற இளஞ்சிங்கங்கள் பணி யாற்றி வந்தனரோ, எந்த வகுப்புவாரி முறை ஒரு காம ராஜரைச் காங்கிர னும் ஒரு குமாரசாமி ராஜாவை மந்திரி சபையிலும், ஒரு லட்சுமண சுவாமியை வைத் தியத் துறையிலும், ஒரு எதிராஜை வக்கீல் துறையிலும், ஒரு ராஜமன்னாரை ஹைக்கோர்ட்டிலும் ஒரு பத்ரோவை போலீஸ் இலாகாவிலும், ஒரு சண்முகத்தை நிதி நிபுணர் துறையிலும், ஒரு ஆற்காட்டாரை அவனி அறிஞர் மன்றத்திலும்,ஆட்சி செலுத்த உதவிற்றோ. அந்த வகுப்புவாரி முறை ட்டவிரோதமாகிவிட்டது! எந்த வகுப்புவாரி முறையை ஒழித்துக்கட்டித் தீரு வது என்று சுயநலச் சூழ்ச்சிக்காரர்கள் சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்து வந்தனரோ, அவர்கள் வெற்றி பெற்றுவிட்டனர். முப்பது ஆண்டுகளாக நாடு முழுவதும் நல்லறி வாளர்கள் பேசிப்பேசி ஆதரவு திரட்டினர்- அந்த வகுப்புவாரி முறை, இதோ சட்டவிரோதம் என்று ஆகிவிட்டது! அமைச்சர்கள், தமது அறிவாற்றலை இதற்கு அரணாக அமைத்தனர் - எனினும், அம்முறையை, சட் டத்தின் துணைகொண்டு முறித்துவிட்டனர். வகுப்பு எதேச்சதிகாரிகள். அமைச்சர்களே! என்ன செய்யப் போகிறீர்கள். சமூக நீதியைக் காக்கப் போரிடப் போகிறீர்களா?

28


28