பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்றி

'வந்தது விபத்து'—இதில், நாட்டில் இதுகாறும் இருந்து வந்த சமூக நீதி சரிந்த விதம். அது காப்பாற்றப்பட வேண்டிய அவசியங்கள் ஆகியவை குறித்து அறிஞர் சி. என். அண்ணாதுரை, எம். ஏ., அவர்கள் விளக்கிக் கூறியுள்ளார்கள்.

பழங் கதை ?—சமூக நீதி ஏற்படுவதற்கு முன் நாட்டில் நீதி இருந்த நிலைமை. அதனால் பார்ப்பனரல்லாதார் அடைந்த இன்னல்கள். அரசியல், கல்வி ஆகிய துறைகளில் ஆரியம் ஆட்சி செலுத்திய தன்மை, சமூக நீதி பிறந்த வரலாறு. அதன் பயனாக நாடு அடைந்த நற்பயன், உல மாற்றம், ஆகியவைகளை இனிய எளிய, தமக்கே உரித்தான உணர்ச்சி மிக்க நடையில், தோழர் காஞ்சி கல்யாணசுந்தரன் அவர் தன் விளக்கியுள்ளார்கள்.

'வந்தது விபத்து !' என்ற கட்டுரையை வெளியிட அனுமதி தந்த அறிஞர் அண்ணாதுரை அவர்கட்கு எமது நன்றி.

தங்களுக்குச் சரி எனப்பட்ட கருத்தின்படி கோட்பாடுகளில் மாற்றங் கொண்டிருந்த போதிலும் தமிழர்க்கு திராவிடர்க்கு இடுக்கண் நேர்ந்த காலத்துத் துளியும் சுணக்கங்காட்டாமல் ஏற்பட்ட இன்னல்களைக் களைய முன்வந்த தோழர்கள் 'தினசரி' ஆசிரியர் டி. எஸ். சொக்கலிங்கம், 'காண்டீபம்' ஆசிரியர் எஸ். எஸ். மாரிசாமி ஆகியோர்க்கும் தமிழகம் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.

பதிப்பகத்தார்.


90