பக்கம்:பொன் விலங்கு.pdf/414

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

412 பொன் விலங்கு

நெஞ்சின் ஆழத்தைத் தொடுகிற அந்தப் பார்வையில் அவளுக்குக் கட்டுப்பட்டான் சத்தியமூர்த்தி. சில விநாடிகளுக்குப் பின் அவளுக்கு மறுமொழி கூறியபோது அவன் மனம் மிகவும் நெகிழ்ந்திருந்தது.

'சத்தியமாக மட்டுமின்றி நித்தியமாகவும் நீ என் மனத்தில் தங்கியிருப்பாய் மோகினி உன் அம்மா உயிருடன் வாழ்ந்திருக்கும் போதேநீஅநாதைதான். அம்மாபோனபின் இப்போதோநீஇன்னும் நிராதரவாகவும், நிச்சயமாகவும் அநாதையாகிவிட்டாய் ஆனால் இனி நீ அநாதையுமில்லை; உன்னை நீயே அநாதையென்று வருணித்துக் கொள்ளுவதற்கும் இனிமேல் நான் விடமாட்டேன். உடம்பும் முகமும் அழகாயிருக்கிற பெண்ணொருத்திக்குக் கணவனாயிருக்கிற ஆண்மகனே நிமிர்ந்து நடக்கிற இந்த உலகத்தில் இதயமும் அழகாயிருக்கிற உன்னைக் கைப்பிடித்த நான் அதற்காக எவ்வளவோ பெருமைப்படலாம். எவ்வளவோ நிமிர்ந்து நடக்கலாம்."

"மேளதாளமில்லாமல் சந்தனம் வெற்றிலை பாக்கு இல்லாமல் நடந்துவிட்ட இந்தக் கலியாணத்துக்கு உலகம் மரியாதை செய்யுமா அன்பரே?" என்று அவள் கேட்ட கேள்விக்குச்சத்தியமூர்த்தி கூறிய பதிலில் ஒரு பெரிய காவியமே உள்ளடங்கியிருந்தது.

"மனத்தின் சந்தோஷமே மங்கல வாத்தியங்களாகவும் பரஸ்பர நம்பிக்கையே அங்கீகாரமாகவும்-நடைபெறும் காந்தர்வ விவாகங்களைப் பற்றி இதிகாசங்களிலும் காவியங்களிலும்தான் இதுவரை படித்திருக்கிறோம் மோகினி. கொட்டும் அடைமழையில் காரிருளில் வலந்தசேனையையும் சாருதத்தனையும் போல் மணந்து கொண்டவர்களும் இந்த நாட்டுக் காவியங்களில் தெய்வீகக் காதலர்களாகத் தானே வாழ்கிறார்கள்."

"யார் இந்தக்காதலர்கள்? அவர்களைப் பற்றி எனக்குக்கொஞ்சம் சொல்லுங்களேன்! உங்களோடு பேசிக் கொண்டிருக்கிற நேரம் வளர வளர நான் உற்சாகத்தை அடைவதாக உணர்கிறேன். ஜமீன்தாரும் கண்ணாயிரமும் மாமிசக் கழுகுகளாக வெளியே காத்துக் கொண்டிருக் கிறார்கள்.அவர்களைப் பார்த்தால்மனமில்லாமல்போலியாகஏதாவது சிரித்துப்பேசவேண்டியிருக்கிறது இன்னும் சிறிது நேரத்துக்கு அந்தப் பாவிகளிடமிருந்து என்னைக்காப்பாற்றுங்கள். உங்களுக்கு ரொம்பப் புண்ணியமாகப் போகிறது"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/414&oldid=595657" இலிருந்து மீள்விக்கப்பட்டது