என்ற ஒன்றே போதுமானது. அரர்ை அருளே.அழுகை யால் பெறும்பொழுது, தாம் உறும் மெய்ப்பாட்டினைக் கூறுவாராய்,
மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து
உன்விாை யார்கழற்கென் கைதான் தலைவைத்துக் கண்ணிர்
ததும்பி வெதும்பிஉள்ளம் பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி
சயசய போற்றிஎன்னும் கைதான் நெகிழ, விடேன் உடை
யாய்என்னைக் கண்டுகொள்ளே
என்று கனிந்து மொழிந்துள்ளார்.
இம் மணிமொழியார் திருப்பாடலில் காணப்படும் விதிர் விதிர்த்து என்னும் தொடரில் கருத்து ஊன்றியது சேக்கிழார் பெருமார்ைக்கு. அத்தொடரை ஆண்டு கொள்ளுதற்குரிய இடத்தினேத் துருவலானர். உயர்ந்த மணியினை உகந்த இடத்தில் பதியவ்ைத்தால் தானே அதற்குரிய பெருமை தந்ததாகும் ? அதுபோல் விதிர் விதிர்த்து என்னும் தொடரினைத் தக்க இடத்தில் அமைப்பதுதானே சிறப்புடையதாகும். ஆகவே, மணி மொழியார் எப்படி ஆண்டவன்முன் இத்தகைய மெய்ப் பாட்டுக் குறிகளுடன் இருந்து முறையிட்டுக்கொண்' டனரோ, அதுபோலவே அரர்ை அன்பராம் ஆளுடைய அரசுகள், திருஒற்றியூர் எழுத்தறியும் பெருமார்ை முன் நின்று அவரது திருக்காட்சியினைக் கண்டு பரவசமுற்று கின்ற நிலையினைக் குறிப்பிடும் அமயத்தில்,
எழுதாத மறை அளித்த எழுத்தறியும் பெருமானைத் - தொழுதார்வம் உறகிலத்தில் தோய்ந்தெழுந்தே அங்கமெலாம்