பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருநர் ஆற்றுப்படை விளக்கம் 1 3. நெடுவரை மிசையகாந்தள் மெல்விரல்

(உயர்ந்த மலையின் மேலே உள்ள காந்தளேப் போன்ற மெல்லிய விரலையும். - . . . -

நெடுவரை - உயர்ந்தமல்ல. காந்தள் என்பதைக் கார்த் திகைப்பூ என்று சொல்வார்கள். விளக்குப் போலத் தோன்றுதலின் அவ்வாறு உரைப்பர். விறலி செவ்வண்ண மேனியளாதலின் அவள் விரல்கள் சிவப்பாக இருக் கின்றன.)

அவள் விரலில் உள்ள நகங்கள் கிளியின் மூக்கைப் போல ஒளி விடுகின்ற பெருமையை உடையன.

கிளிவாய் ஒப்பின் ஒளிவிடு வள் உகிர். .

[கிளியின் மூக்கை ஒத்தலையுடையதும் ஒளியை விடு கின்றதுமாகிய வளப்பத்தை உடைய கை நகங்கள்ே யும்,

வாய் என்றது முக்கு வள் - வளப்ப்ம்: அழகு உகிர்கை நகம்.)

ఆమె అణLL தனங்கள் கண்டார்க்கு வருத்தத்தை உண்டாக்குவது; அழகுத் தேமல் படர்ந்தது. இரண்டு

நகில்களும் நெருங்கியிருத்தலின் ஈர்க்கும் இடையாதபடி அமைந்துள்ளன, இளமையும் அழகும் பொருந்தியவை.

அணங்கென உருத்த சுணங்கு அணி ஆர்த்து ஈர்க்கு இடை போகா ஏர் இள வனமுலை. . . . . . . ." (பிறருக்கு வருத்தமெனத் தோன்றின அமுகுத்தேமல்

உள்ள மார்பிடத்தில், ஈர்க்கும் நடுவே போகாத எழுச்சி யையுடைய இளைய அழகிய தனங்களேயும். -