பக்கம்:பொருநர் ஆற்றுப்படை விளக்கம்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 பொருள் ஆற்றுப்படை விளக்கம் யில்லாத நிழலாதலின் மெல் கிழல்' என்ருர். மருங்கில். இடத்தில்.) . . . . . . .

அங்கே தங்கினவர்கள் காட்டிலே உறையும் கடவுளைப் பாடித் தம் கடமையை முடிக்கிருர்கள்.

காடுறை கடவுட்கடன் கழிப்பிய பின்றை.

(கடவுட்கடன் - காட்டில் தங்குகின்ற தெய்வத்திற்கு மனமகிழ்ச்சியாகச் செய்யும் முறைமைகள். கழிப்பிய பின்றை - செய்துவிட்ட பிறகு.) -

எதிர்வருவோன். கூற்று

பெருமைமிக்க செல்வத்தையும் பெரும்புகழையும் வலிமையான முயற்சிகளையும் உடையவர்களும் வெற்றி முரசுகள் முழங்கும் சேனைகளை உடையவர்களும் ஆகிய சேர சோழ பாண்டியர் என்ற மூன்று மன்னர்களும் ஒருங்கே தங்கியிருந்த தோற்றத்தைப் போல, வாயில்ை பாடும் பாடலேத் தொடங்கி எழுந்திருந்த பயன்களை உடைத்தாகிய கூத்தர்க்குத் தலைவனே!

டுகெழு திருவிற் பெரும் பெயர் கோன்றன. முரசு முழங்கு தான மூவரும் கூடி. (பெருமை பொருந்திய செல்வத்தையும் பெரிய புகழை யும் வலிமையையுடைய முயற்சியையும் உடையவர்களும் வெற்றி முரசு முழங்கும் சேனேகளே உடையவர்களுமாகிய சேர சோழ பாண்டியர் மூவரும் ஒருங்கு கூடி.

பீடு- பெருமை, தி - செல்வம்: பெரும் பெயர் - பெரும் புகழ்; உலகம் அறிந்த பெரிய ப்ெயர் என்றலும் ஆம். நோன் தாள். வலிய முயற்சி. தானே - சேனே. மூவரும்