பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எல்லோரையும் ஒரு முறை பார்த்துக்கொண்டே வந்து, இரண்டு எண்களை திடீரென்று, சத்தமாக அழைக்க வேண்டும். (உ-ம் 6, 8).

தங்கள் எண்களை அழைத்தவுடனே, எண்களுக்குரிய இருவரும், தங்கள் இடத்தை விட்டு புறப்பட்டு ஓடிப் போய், அடுத்தவர் இடத்தில் நின்று கொள்ள வேண்டும். நடுவில் நின்று எண்களைக் கூப்பிட்டவர், இடம் விட்டு இடம் மாற்றிக் கொள்பவர்களின் இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் போய் நின்று கொள்ள வேண்டும்.

இடம் கொடுத்து ஏமாந்தவர் வட்டத்தின் மைய இடத்திற்கு வர வேண்டும். இடம் இல்லாமல் அவரே ஏமாந்தால், மீண்டும் அவரே இரு எண்களை சத்தமிட்டுஅழைக்க, இவ்வாறு ஆட்டம் தொடர்ந்து நடைபெறும்.

குறிப்பு : ஒரே சமயத்தில் மூன்று நான்கு எண்களையும் கூப்பிடலாம். பலர் இடம் விட்டு இடம் தேடி ஒடுவது பார்க்க நன்றாக இருக்கும்.

2. எண்களுக்குப் பதிலாக வண்ணங்களின் பெயர்களைத் தரலாம். அல்லது எல்லோரும் தெரிந்தவர்களாக இருந்தால், பெயரிட்டும் கூட அழைக்கலாம்.