பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




7. ஆறும் சேறும்


பலர் கூடியிருந்து குதூகலமாக மகிழ்ந்திருக்கும் பொழுது ஏற்படுகின்ற இன்ப மனத்தின் வெளிப் பாட்டை செயல் மூலமாக மிகுதியாகக் காட்ட, இந்த விளையாட்டு அதிகமாகவே உதவிடும். சிறு குழந்தைகளுக்கும். இந்த ஆட்டம் ஒரு சிறந்த ஆட்டம் தான்.


இதற்கென்று முன் கூட்டியே எந்த விதமான விளையாட்டு சாதனங்களையும் தயாரிக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வந்திருக்கின்ற, அதே சமயத்தில் விளையாட விரும்புகின்ற அனைவருமே இந்த ஆட்டத்தில் பங்கு பெறலாம்.

எல்லோரையும் இரண்டு குழுவினராக சம எண்ணிக்கையில் பிரிக்க வேண்டும்.

பிறகு, நான்கு அடி இடைவெளி இருப்பது போல், இரண்டு நேர்க்கோடுகளை (தண்டவாளம் இருப்பதுபோல) இணையாகக் குறித்து விடவேண்டும்