பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் இயல்

புத்தரின் அவதாரம்

‘இந்த உலகத்திலே, ஏதோ ஒரு காலத்தில், மிக அருமையான, ஒப்பற்ற ஒருவர் தோன்றுகிறார். இந்த ஒப்பற்ற ஒருவர் யார்? அவரே பூரண ஞானமடைந்து உயர்நிலை பெற்றுள்ள ததாகதர்.’

—புத்தர்

ட இந்தியாவில் கி.மு. ஆறாவது நூற்றாண்டில் அமைந்திருந்த ராஜ்யங்களில் முக்கியமானவை இரண்டு : அவை கோசல நாடும், மகத நாடும். கோசல நாட்டின் தலைநகர் சிராவஸ்தி.[1] மகதத்தின் தலைநகர் இராஜ கிருகம். மகத நாடு பிற்கால இந்திய சரித்திரத்தில் எல்லை யற்ற புகழ் பெற்றது. சந்திரகுப்தர் மகத சக்கரவர்த்தியாக வந்த போது அதன் தலைநகர் பாடலிபுரம். கௌதம புத்தர் காலத்தில் பாடலிபுரம் ‘பாடலிகாமா’ என்ற கிராமமாகவே இருந்தது.

மகதத்திற்கு வடக்கே வைசாலியைத் தலைநகராகக் கொண்ட விரிஜி[2] நாடு இருந்தது. அதற்கும் அப்பால் மல்லர் என்ற வகுப்பினர் வாழ்ந்து வந்தனர்.


  1. சிராவஸ்தி (வடமொழி)- பாலியில்: சாவத்தி.
  2. விரிஜி (வடமொழி). - பாலியில்:வஜ்ஜி.

போ -1