பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184 ⚫ போதி மாதவன்

(நமக்கு) வந்துள்ள தத்துவங்களில் (ஒன்றாக) அமைந்திருக்கவில்லை எனினும்–நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன்.......

‘ஓ பிக்குக்களே! துக்க உற்பத்தியை நீக்கித் தள்ளுதற்குரிய வாய்மையை... நான் தெளிவாக உணந்துகொண்டேன்......

ஓ பிக்குக்களே! துக்க உற்பத்தியை நான் முற்றிலும் நீக்கித் தள்ள முடிந்தது.......

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்கம் பற்றிய உயரிய வாய்மை இது என்பதை நான் உணர்ந்து கொண்டேன்........

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்கத்தை நான் பூரணமாக உணர்ந்து கொள்ள முடிந்தது......

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்கத்தை நான் பூரணமாக நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது......

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்க மார்க்கம் பற்றிய உயரிய வாய்மை இது என்பதை நான் உணர்ந்து கொள்ள முடிந்தது......

‘ஓ பிக்குக்களே! துக்க நீக்க மார்க்கத்தை நான் அடைந்து விட்டேன்......

‘ஓ பிக்குக்களே! இந்த மூன்று வரிசைகளாக, இந்தப் பன்னிரண்டு வகைகளில் உயரிய வாய்மைகள் நான்கினில் ஒவ்வொன்றைப் பற்றியும் எனது அறிவும் உள்ளுணர்வும் முற்றும் தெளிவு கொள்ளும்வரை, (எனக்குச் சந்தேகந்தான்; )–வான மண்டலங்களிலும், அல்லது பூமியிலும்,