பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 ⚫ போதி மாதவன்

‘ஒ பிக்குக்களே! இந்தக் கூச்சல் நீடித்து நிற்காது. ஏழு நாட்களில் இதெல்லாம் அடங்கி விடும். உங்களை அவர்கள் ஏசினால், பிக்குக்களே, நீங்கள் இவ்வாறு மறுமொழி கூறுங்கள் : “சத்தியத்தைப் பிரசாரம் செய்தே ததாகதர்கள் மக்களுக்கு வழிகாட்டுகிறார்கள். அறிவாளரைக் கண்டு எவர்கள் கூச்சலிடுவார்கள்? சீலம் நிறைந்தவர்களை எவர்கள் நிந்திப்பார்கள்? தன்னடக்கம், நியாயம், பரிசுத்தமான உள்ளம் ஆகியவற்றோடு விளங்க வேண்டும் என்பதே எங்கள் குருவின் போதனை!”