பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கபிலையம்பதி ⚫ 265

விதித்திருந்த ஒழுக்க விதிகளையெல்லாம் தொகுத்து ‘விநய பிடகம்’ என்ற நூலைத் தயாரிக்கக் காரணனாயிருந்தான்.

இவ்வாறு, முன்னால் ஓர் இளவரசர் துறவு பூண்டதற்காக வருந்திக் கொண்டிருந்த கபிலையம்பதி, புத்தருடைய விஜயத்தால், துறவிகளின் பெரு நகரமாக மாறி விட்டது. கண்ட இடமெல்லாம் காஷாய உடைகள்! திரும்பிய இடமெல்லாம் திருவோடுகள் ! பார்த்த இடமெல்லாம் பிக்குக்களின் திருக்கூட்டம்!

போ–17