பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று காட்சிகள் ⚫ 65

சித்தார்த்தருடைய மனவேதனையை உணர்ந்து சந்தகனும் வருந்தினான். காணகூடாத காட்சி எதிர்ப் பட்டுவிட்டது! உண்மையை ஒளித்துக் கூறும் துணிவும் அவனுக்கு ஏற்படவில்லை. சித்தார்த்தர் நோயாளியின் முகத்தைக் கருணையோடு உற்றுப் பார்த்துக் கொண்டே. ‘சந்தக!’ இந்தப் பிணிக்கு அப்பால் மனிதருக்கு என்ன நேரிடும்?’ என்று வினவினார்.

‘ஒரே முடிவு தான்-மரணம்!’

‘மரணமா?’ என்று திடுக்கிட்டுக் கேட்டார் சித்தார்த்தர்.

அந்தக் தேள்விக்கு மறுமொழி கூறுவதுபோல் சிறிது தூரத்தில் ஒரு சங்கின் அலறல் கேட்டது. ஒருவன் தலை விரி கோலமாகக் கைகளில் தீச்சட்டி ஏந்தி வந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின்னால் நான்கு மனிதர்கள் ஒரு பாடையைத் தூக்கிக்கொண்டு வருவதையும் சித்தார்த்தர் கண்டார். சோகம் தேங்கிய முகங்களுடன் கண்ணீர் பெருக்கிக் கொண்டே வேறு சிவரும் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.

இது என்ன ஊர்வலம்?’ என்று சித்தார்த்தர் பாகனைக் கெட்டார்.

‘எவனோ ஓர் ஏழை இறந்து போய்விட்டான். அவனுடைய உதிரம் உறைந்து, உடல் பசையற்றுப் போய் விட்டது. அந்த உடலின் கண்களினின்றும் பார்வை ஒழிந்தது; செவிகளினின்றும் கேள்வி ஒழிந்தது; நாசியினின்றும் மோப்ப உணர்ச்சியும் அகன்று விட்டது. இப்போது அது மரக் கட்டை மாதிரிதான். ஆற்றோரமாகக் காட்டத்தில் வைத்து எரிப்பதற்காக உறவினர்கள் அதைத் துணியில் சுற்றி எடுத்துச் செல்கிறார்கள். இனி, அந்த உடலுக்குத் துன்பமும் இல்லை, இன்பமும் இல்லை அதற்கு நீரும் ஒன்று தான், நெருப்பும் ஒன்றுதான்!’