பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 Δ ಊಹೂಗಿಕ artäå தமிழ் இடும்பைகொள் பருவரல் திரக் கடுந்திறல் அஞ்சன உருவன் தந்துநிறுத் தாங்கு அருவழி இருந்த Giyip வளவன் புதுமையில் நிறுத்த புகழ்மேம் படுந ! (புறம். 174) சங்க காலம் என்று கூறப்படும் நாளிற்கூட இத்தகைய வரலாறுகள் தமிழ் நாட்டில் வழக்கில் இருந்து வந்தன என்பதற்கும் இவ்வுவமை எடுத்துக் காட்டாகும். உவமை யில் மற்றொரு சிறப்பும் உளது : ஞாயிற்றுக்கு உவமை யாகச் சோழனும், கண்ணனுக்கு உவமையாகச் சோழிய ஏனாதி திருக்கிள்ளியும் கூறப் பெற்றுள்ளனர். கதிரவனைவிடக் கண்ணனும், சோழனைவிடச் சோழிய ஏனாதியும் பெருமையுடையவராய்விட்டமை கண்கூடு. சக்கரவர்த்தியாகிய சோழனைவிட அவன் சிற்றரசனாகிய ஏனாதி உயர்ந்தவன் என்று நேரடியாகக் கூறுதல் தவறாய் முடியும். ஆனால், இந்த அம்மையார் சிறந்த ஒர் உவமையை அறிவுத் திறத்துடன் ஆட்சி செய்வதன் மூலம், தாம் கூற வந்த உண்மையைக் கூறி விட்டார். சோழனைக் கதிரவனுக்கு உவமை கூறி விட்டமையின், யாரும் தவறாக நினைத்தற்கில்லை ! ஆழ்ந்து சிந்திக்கும் பொழுது தான் உவமையின் சிறப்பு வெளிப்படுகிறது. இத்தகைய துணுக்கமான உவமைகள் பாடப் பெண்பாற்புலவர்கள் சிறந்தவர்கள். 15. புலவர் கண்ட போராட்டம் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, சோழப் பேரரசர்களுள் ஒருவன். சிறந்த உடற்கட்டும் போர். வன்மையும் உடையவன் ; காமவேள் போன்ற அழகுடைய