பக்கம்:மகளிர் வளர்த்த தமிழ்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 A மகளிர் வளர்த்த தமிழ் பார்க்கவேண்டிய நிலையில், இவர் மட்டும் வீட்டுப் புறக்கடையில் வளர்ந்திருக்கும் பனை மரத்தில் சாய்ந்து கொண்டே நடைபெறும் வேடிக்கையை முற்றிலும் காணக்கூடிய பேற்றைப் பெறுவாரோ ? இத்துணைப் பேர்களும் விழுந்தடித்துக்கொண்டு சென்று காணக்கூடிய வேடிக்கை என்னவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள் ? நக்கண்ணையார் ஊரின் மன்றில் ஒரு மற்போர் (குஸ்திச் சண்டை) நடைபெறுகிறது. இதுதானா ஒரு பெரிய காரியம் என்று தானே நினைக் கிறீர்கள் ? அந்த மற் போரின் சிறப்பை அறிய வேண்டுமா யின், அதற்குத் தமிழ் நாட்டின் கிராம வாழ்க்கை பற்றி ஒரளவு அறிந்திருக்க வேண்டும். இன்றுகூடத் தமிழ் நாட்டுக் கிராமங்களில் ஒற்றுமை ஒரளவு காணப்படுகிறதென்றால், அன்றைய நிலைமை பற்றி அதிகம் கூற வேண்டா. உள்ளுரைச் சேர்ந்த மல்லரும், வீரரும், வேட்டைக்காரரும், புலவரும், பலர் இருப்பர். இவருள் சிலர் உண்மையிலேயே தம் கலைகளில் வல்லவராயும் இருப்பர் ; பலர் போலிகளாவும் இருப்பர். எத்துணைப் போலிகளாக இருப்பினும், அந்தக் கிராமத் தார்கள் அவர்களை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். அதிலும், அயல் கிராமத்தானுக்கும் தன்னுடைய கிராமத் தானுக்கும் போட்டி ஏற்படும் பொழுதுதான், அவர் களுடைய உள்ளூர்ப் பற்றைக் காணவேண்டும் பற்று என்பது போய், வெறியாகக் கூடப் பல சமயங்களில் அது முடிந்துவிடும் ! "கிரிக்கெட் விளையாட்டு உலக ஒற்றுமையை வளர்க் கிறது என்று கூறிக்கொள்கிறார்கள். ஆஸ்திரேலியர்கள் இங்கிலாந்தில் சென்று அ டி க்க டி ஆடுகிறார்கள். ஆஸ்திரேலியர்கள் இந்த ஆட்டத்தில் மிகவும் சிறந்தவர்கள் என்பது பலரும் அறிந்த ஒன்றே. ஆங்கில நாட்டார்கள் மிகுந்த பண்பாடும் நாகரிகமும் உடையவர்கள் தாம். என்றாலும் என்ன ? ஆஸ்திரேலியருக்கும் ஆங்கிலேயருக்