பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாரதியார் செந்தமிழ் நாடென்னும் போதினிலே" [என்ற பாடல் உற்பத்திக்குக் காரணம்.] --- தமிழ்நாட்டைப் பற்றித் தமிழ்க்கவிகள் தந்தால் அமைவான பாட்டுக் களிப்போம் பரிசென்று, சான்ற மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் உரைத்தார். தேன்போற் கவிஒன்று செப்புகதீர் என்று பலநண்பர் வந்து பாரதி யாரை நலமாகக் கேட்டார்; அதற்கு நமதையர், என்கவிதான் நன்றா யிருந்திடினும் சங்கத்தார் (தான் புன்கவிஎன் றே சொல்லிப் போட்டிடுவார்; போட்டால் சங்கத்தில் சர்க்கார் தயவிருக்கும்! ஆதலிஞல், உங்கட்கு வேண்டுமெனில் ஓ துகின்றேன் என்றுரைத் அந்தவிதம் ஆகட்டும் என்றார்கள் நண்பரெலாம்.[தார்! 'செந்தமிழ் நாடென்னும் போதினி லேயின்பத் தேன்வந்து பாயுது காதினி லே' என் றழகுத் தமிழ்நாட்டை அப்படியே செஞ்சால் எழுதி முடித்தார் இசையோடு பாடினர் காதினிக்கும் கல்ல கருத்தினிக்கும் பாட்டிக்கான் மேதினியிற் சோதி விளக்கு! 2

9

9