பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

அண்டை அயலகத்தில் ஆமைவடை மோர்க்குழம்பு கண்டால் அதுபோற் கறியுண்ண ஆசைவரும். ஆமைவடை மோர்க்குழம்புக் கப்பாலோ, நாகரிகச் சீமை அவரைக்காய் சேமியாப் பாயாசம்! வீட்டில் பதார்த்த விழாநடத்த ஆசையுண்டு; மூட்டைப் பணம்வேண்டும் முள்ளங்கிப் பத்தையைப்போல் ! இட்டகூழ் இன்றைக்கு நன்றா யிராவிட்டால், பட்டினியாற் போட்டுவிடு; நாளைக்குப் பார்ப்பாய் நீ இட்டதொரு கூழில் இனிமை கிளம்புவதை! பட்டினியால் லாபம் பல.

13

13