பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமைப்பினிலே ஆவேசம், இயற்கையெழில், நற்காதல் ஆழம் காட்டித் தமைத்தாமே மதியாத தமிழர்க்குத் ட தமிழறிவில் தறுக்குண் டாக்கிச், சுமப்பரிய புகழ்சுமந்த சுப்ரமணிய பாரதியார் நாமம் வாழ்க! மக்களுயர் வாழ்க்கையிலே மாதர்க்கு விடுதலையை மறுத்தி ருக்கும் துக்கநிலை தனையகற்றித் தூயநிலை உண்டாக்கிப் பெண்மை தன்னில் தக்கதொரு தாய்த்தன்மை, சமத்வநிலை காட்டி, உயிர் தளிர்க்கும் காதல் துய்க்கும்விதம் எழுத்தளித்த சுப்ரமண்ய பாரதியார் நாமம் வாழ்க! பழங்கவிகள் படிப்பதற்கோ பழம்படிப்புப் பெரியாரின் துணையும் வேண்டும். விழுங்குணவை விழுங்குதற்கும் தமிழர்க்கோ ஊக்கமில்லை. கட்டா யத்தால் வழங்குதற்கோ ஆட்சியில்லை; தெளிதமிழிற் சுவைக்கவியால் மனத்தை அள்ளித் தொழும்பகற்றும் வகைதந்த சுப்ரமணிய பாரதியார் நாமம் வாழ்க!

22

22