பக்கம்:மகாகவி பாரதியார், அண்ணாதுரை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பிணத்தினைப் போற்றேல் புதியன விரும்பு பேய்களுக் கஞ்சேல் போர்த்தொழில் பழகு முனையிலே முகத்தவில் மேழி போற்று யாரையும் மதித்துவாழ் - இவை, பாரதியாரின் புதிய ஆத்திசூடி! புதிய பாதை! பாரதி பாதை ! தேசீய மணி மண்டபத்தோடு முடிந்து விடுவதல், அதற்கும் அப்பாலுள்ள சமதர்ம புரிக்குப் போவதற்கு அமைந்த பாதை! அந்தப் பாரதி பாதையை அமைத்துக்கொண் டிருக்கும் - அரும்பணி ற்றும் நாம் பாரதியார் பெற்ற சிறப்புக்கண்டு பெருமை யடைவதுடன், பாரதியாரின் முழு உருவமும் மக்களுக்குத் தெரியம் செய்யும் காசியத்தையும் மேல் கொண்டுள்ளோம் பாரதி காட்டிய பாதையை, நாடு நன்கு அறியவேண்டும் ! பரங்கியை ஓட்டிவிடுவது மட்டு மல்ல அது. நாட்டின் கேட்டுக்குக் காரணமாக உள்ள தனைத்தையும் ஓட்டிப், புதிய சமூக அமைப்பாக்கும் பாதை! அந்தப் பாரதி பாதையை நாம் போற்று கிறேம்!

ஸ்ரீமகள் அச்சகம், சென்னை - 1

40