பக்கம்:மகாகவி பாரதியார்-புதுமைக்கண்ணோட்டம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 £3 சேர்ந்து சொன்ன அபிப்பிராயத்தை தாம் திரஸ்காரம் செய்யக் கூடாதென்று அவர் நினைக்கிருர், அவர் முற்றி லும் யோக்கியதையுடனேதான் அங்ங்ணம் செய்கிருச் என்பதில் ஆrேபணையில்லை. அவரைச் சொல்ல என்ன குற்றமிருக்கிறது? இப்பொழுது விஷயம் இந்த நிலைமையில் இருக்கிறது. இவ்விதமிருப்பதை மாற்றிவிட வேண்டுமென்பதே புதிய கட்சியின் விருப்பம், நாங்கள் இதன் பொருட்டுக் கொண்டு வந்திருக்கும் ஆலோசனை உங்களால் ஒப்புக் கொள்ளப்படும் பகத்தில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கு அது பழைய கட்சியாரின் ஆலோசனையைக் காட்டிலும் மிகுந்த அனுகூலம் உடையதாயிருக்கும். உங்களுடைய கைத்தொழில்கள் முற்றிலும் நாசமாய் விட்டன. அவை அன்னிய ராஜாங்கத்தால் நாசமடைந்து போயின. உங்களுடைய செல்வம் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டேயிருக்கிறது. ஒருமனித ஜந்து எவ்வளவு தூரம் தாழ்ந்த நிலைமைக்கு வரமுடியுமோ அந்த நிலைமைக்கு நீங்கள் வந்து கொண்டிருக்கிறீர்கள். இந்த ஸ்திதியில் உங்களுக்கு நீங்களே உதவி செய்து கொள்ளு வதற்கு ஏதேனும் விண்ணப்பம் கொடுத்து நீங்கள் நிவாரணமடையப் போவதில்லை. பஹிஷ்காரம் ஒன்றே உங்களுக்கு நிவாரணமாகும். உங்கள் சக்திகளை சேகரம் செய்யுங்கள். உங்களது வல்லமையை ஒழுங்கு படுத்துங்கள். அதன் பேரில் நீங்கள் கேட்பதை அவர்கள் மறுக்கத் துணியாதபடிக்குள்ள வேலை செய்யுங்கள். மஹாபாரதத் திலே ஒரு கதையிருக்கிறது. பாண்டவர்கள் கெளரவர்கள் இடத்தில் ஏதேனும் ஒரு விதத்தில் சமாதானம் செய்து முடித்து வரும்படி ரீ கிருஷ்ணனை அனுப்பிஞர்கள். ஆளுலிதன் மத்தியிலே இருதிறத்தாரும் சும்மாவிருக்க வில்லை. சமாதானம் ஒருவேனே நிறைவேருமல் தவறிப்