பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளைக் கலி முதல் பிரம்மா பெருமூச்செறிந்தார். முதற் பூ மடலவிழ்ந்தது. முதல் குரல் புறப்பட்டது. குழந்தை அழுதது; அழுதது; அப்படி அழுத்து. அபாயங்களைத் தன்னுள் அடக்கிக் கிடந்த காடு. கூப்பிடு தொலைவில் ஒரு காட்டாறு. கருக்கல் பொழுது. புல் தரை; பிறந்த மேனியாய்க் கிடந்தது பச்சை மண். பச்சை ரத்தம் மேனியை வெட்டிப் பாய்ந்தோடத் துடித்துக் கொண்டிருந்தது, குழந்தையின் உடல் துடி துடித்தது. நஞ்சுக் கொடி துவண்டு கிடந்தது. ரத்தத் துளிகள் பல கோடுகளில், பல கோணங்களில் சிந்திக் கிடந்தன. பன்னீர்த் துளிகள் அந்தக் குருதிப் புல்லில் இரண்டறக் கலந்தன. புள்ளி மான்கள் ஓடிவந்தன. வண்ணப் பறவைகள் நாடி வந்தன. வாயில்லாப் பிராணிகள் வாய் விட்டுப் புலம்பின. - - - - அந்தக் குழவியின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. குழந்தைத் தெய்வம் அழுதது; அழுது கொண்டே யிருந்தது. q go οσ go