பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 மகாத்மா காந்திக்கு ஜே! 'மன்றுளே மாறியாடு மறைச்சிலம்படிகள் நடுங்கின; 'வென்றுளே புலன் களைந்தார் மெய்யுணருள்ளந் தோறுஞ் சென்றுளே அமுதமூற்றுந் திருவருள் திகைத் தது; சிவன் சிந்தித்தார். "கவுணியர்க்குப் பால் சுரந்த சக்தி தடுமாறினாள்; பங்கயற்கணரிய பரம் பரனுருவே தனக்குரிய படிவமாகி, எண்ணிறந்த சரா சரங்களின்றுந்தாழாயிற் கொங்கயற் கண் மலர்க் கூந்தல் குமரி பாண்டியன் மகள் செயலிழந் தாள். சிவசத்தி சிந்தித்தாள். ‘'தேவி, பூலோகம் வர வர உருப்படாமல் போய்க் கொண்டிருக்கிறது. பார்த்தாயா, அந்தப் பச்சை மண்ணை? கேட்டாயா, அதன் தீனக்குரலை? குவா. குவ்ா' என்று கதறி அழும் அதன் வேதனையிலே, 'தெய்வமே, தெய்வமே!’ என்ற எதிரொலி கேட்கிறதே? பாவம்'...படைப்பு புதிர் என்று சொல்லுகிறார்கள் மண் னிலே. ஆனால், அவர்களே படைப்பைப் புதிராக்கி, அத் துடன் வாழ்க்கையையும் புதிர்ாக்கிக் கொண்டு விடு கிறார்கள். அது மட்டுமா? நீயும் நானும் கூடத்தான் அந்தப் புதிர்ப் பிணைப்பில் இணைக்கப்பட்டுப் பேசப் படுகின்றோம். விந்தைமிகு மக்கள்-மக்களா? மாக்கள்!' பிறை சூடியின் குரலில் எரிமலை கனன்றது. 'அன்பரே, உங்கள் வாய்மொழி முற்றும் உண்மை. கடந்த பத்து நாழிப் பொழுதாக நான் உறக்கம் கொள்ள வில்லை. முதற்குரல் எதிரொலித்தது-திடுக்கிட்டு விழித் தேன். சிசுவின் வினைப்பயன் அப்படியோ? பாவம், பிறந்த மண்ணில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அதோ, பொழுது புலர்ந்து விட்டது. காட்டு வழி நடப்ப வர்கள் ஓடோடி வருகிறார்கள்? குழந்ைையப் பார்க் கிறார்களே! ஆ என்ன கொடுமை? ஐயோ, அவர்கள் எல்லோரும் போய்விட்டார்களே, மதலையை மறந்து...!