பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 மகாத்மா காந்திக்கு ஜே! கிழவர் சுருக்குப் பையிலிருந்து தடவி இரண்டு காசை எடுத்து வைத்துக் கொண்டு தலையை நிமிர்த்தினார். கைகளை முடிந்த மட்டும் ஒசைப்பட தட்டினார். 'இந்தாத்தா, ரெண்டு காசு!...” என்று பொக்கை வாயை அகலத் திறந்து, ஒர் அழகான பாசச் சிரிப்பை உதிர்த்த படி, இரண்டு காசு நாணயத்தை, அந் நாணயத்தின் நாணயம் பங்கப் படாத ரீதியில், உரியவளிடம் நீட் டினாா. தக்காளிக்காகத் தவம் இயற்றி, ஒற்றைக்காலால், நின்று கொண்டிருந்த செட்டியார் இன்னமும் நகர வில்லை. - - அறந்தாங்கி-நாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் அத்த ஆவணத்தாங்கோட்டைச் சாலையை அசட்டை செய்து விட முடியுமா, என்ன? கிழவர், மண்டையில் அடித்த உச்சி வெயிலைச் சட்டை செய்யாமல் இடது காதிடுக்கில் ஒளிந்திருந்த பாதி சுருட்டை வாய் ஊற எடுத்து, ஒரே தீக்குச்சியில் சமர்த்தாகப் பற்ற வைத்துப் புகையை இழுத்தார். புகை யின் ரசிப்பில் வெகு சுவாரசியமாக ஈடுபட்டிருந்தார் மனிதர். ஏதோ சத்தம் கேட்டது. ஆடொன்று அவரது சோற்றுப் பானையை லாவி'க் கொண்டிருந்த்து. இந்த ஊரு நாட்டிலே பண்க்காரங்க ஆடு அனந்தமா இருக்கே: அங்கிட்டாலே நாடிப் போவேன். இந்தக் கிழடு கதை ஒனக்குத் தெரியாது போலே. ஊருக்குப் புதுசோ?... நான் வடிக்கிறது ஒரு நாளைக்கு ஒரு கடுத்தம் இந்த லச்சணத் திலே, நீயும் வந்துதான் தீரனும்னு அடம் பிடிச்சா, நில்லு, ஒனக்கும் போடுறேன். அல்லாச் சோத்தையும் நான் தின்னுதான் என்ன கண்டேன்?... நாத்த ஒடம்பு மேலுந்தான் நாறித்தொலையுது' என்று ஒரு பாட்டம்’ பேசிவிட்டு, தலையில் சுற்றியிருந்த ஹைதர் காலத் துவாலையை நிமிண்டிச் சொறிந்து கொண்டார். சரும்