பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 131 வேலைக்காரப் பெண் அவரது rேமலாபம் பற்றி விசாரித்தாள். - * * - அவள் யார் தெரியுமா? ア了gf... 3 ஆன்மீக பலத்தை ஆசனமாக்கி அமர்த்தபடி நேயம் கலந்த உருவத்தையும் நினைவு கடந்த ஈடுபாட்டையும் பக்தியாக்கிக் கைதொழுது, எதிர்முகமாக நின்ற ஈசனை அழைத்துப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார் சிற்றம்பலம் அவர்கள், அப்பிரார்த்தனை ஊனையும் உயிரையும் உருக்கிக் கொண்டிருந் திருக்க வேண்டும். அதனால்தான், கண்ணிர் அப்படிப் பெருகி வழிந்ததோ? ஆம், கண்ணீர் இல்ல்ையேல், சிரிப்புக்குரிய பங்கு, மகத்துவம் மனிதனுக்குப் புரியவே புரியாது போலும்! கண்ணின் ஒரு பகுதின்ய அனுபவித்தவருக்குச் சிரிப்பின் மறுபகுதி தன்னாலேயே கிடைத்தது. நிழலற்றுத் திரிந்தவரே பலருக்கு நிழலானார். அன்று இவருக்கு நிழல் தந்த புண்ணியவதியோ இன்று நிழ லுருவம் பெற்று விட்டாள்: r - பூசனை முற்றுப் பெற்றது. அவர் கதவுகளை நன்றாகத் திறந்து விட்டார். பூந் தென் றல் மிதந்தது. கன்னங்களில் உவர்க்கோடிட்டுக் கிடந்த கண்ணிரை அது போக்கியது. அமைதி பூத்திருந் தது, மனத்திடை விண்ணிடை பூத்திருந்த நட்சத்திரப் பூக்களின் ஒளிச் சுகந்தத்தையும் அவர் அனுபவிக்கத் தெர்ந்தவர்.