பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 148 வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார், பாவம்! மற்றவர் களுக்கு இவர் ஒரு எச்சரிக்கை ஆகிவிட்டார். அந்த வகையில் அவ்ர் பாவம் கழிந்துவிடும்.கழுவாய் கிடைத்து விடும்: - இப்போது தம்மைத் தாமே ஒரு முறை நோக்கிக் கொண்டார். தமக்குத்தாமே சிந்தித்துக் கொண்டார். கற்பு நிலை என்பது ஆணுக்கும் இருக்க வேண்டும். என் வரை இப்பண்பிலே நான் நீதியுடன் நடந்துவிட்டேன், என் சாரதாதான் என் நீதி!' திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் வழிமறித்துக் கிடந்தாள் ராணி. விழியை வழியாக்கிப் பார்த்தார் சிற்றம்பலம். பருவத்தின் முதல் வாசல்ல மிதித்திருந்த நேரத்தில், அவள் ஏன் இப்படி ஆகிவிட்டாள். ஒடிய டாக்ளியை அழைத்து, ராணியை வீட்டுக்கு அழைத்துச் சென்றார். பரிசோதனைகள் நடந்தன. நஞ்சு சாப்பிட்டிருக்கிறாள் ராணி. அழகின் ராணிக்கு இப்படி ஓர் அவக்கேடு ஏன்?... பொறியைக் கலக்கி விதி விளையாடலாமோ? ஒர் இங்' கிதம் வேண்டாமா? இங்கிதமின்றி நடந்துவிட்ட பேய் உலகிலே அவளும் பேயாக மாறிவிட முடியாமல், பேய் உலகிலிருந்து விடுதலை பெற முடிவு கட்டியிருக் கின்றாள்! - எப்படியோ, ராணி மறுபிறவி கொண்டு எழுந்தாள். "என் பசியையும் என் அழகையும் துஷ்பிரயோகம்.செய் தாள் ஒரு அரக்கி. என்னையுமறியாமல் என் மானத்தைப் பறிகொடுத்தேன். என்னை தன் காப்பாற்றினீர்கள்?அவள் புலம்பினாள். விஷயம் இதுவே. அவள் அழுத பாஷை நீளம்: Lo–10