பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 மகாத்மா காந்திக்கு ஜே. சிற்றம்பலம் தம்மை முழு மனத்துடன் நம்பிய இறுக்கத்துடன், உந்திக் கமல்த்தினின்றும் பிறந்த அமுதச் சிரிப்பினை மெள்ள மெள்ள உதட்டுக் கோணங்களிலே

)?) விடலானார்!

8 பிறந்த நாள் விழா ஆரம்பமாயிற்று. பங்களா விழாக் கோலம் பூண்டது. பஞ்சுமெத்தை இடப்பட்ட நாற்காலியில் திருமிகு. சிற்றம்பலம் அவர்கள் வீற்றிருந்தார், மகாராஜாவுக்கு நேராக!-வருவோர் போவோரின் வணக்கத்தைக் கவரு கிற ஜெயஸ்தம்பமாக புத்தாடைகள் அவருக்குப் புது மணம் வட்டின. மலர்மாலையின் வாடை உள்வட்ட மாக நெறி ஏற்றியது. அந்தி மயங்கி வந்தது. z பட்டணத்துப் பிரமுகர்கள் பலர் விழாவுக்கு வந்து சிறப்பித்தனர். வந்த பெரிய மனிதர்கள் அனைவரும் வயதில் சின்ன மனிதர்களாகவே இருந்து விட்டார்கள். ஆனபடியால், அவர் யாரிடமிருந்தும் ஆசி பெற பாக் கிய்ம் செய்திருக்கவில்லை. மாறாக, அவரது வாழ்த்துக் களைப் பலர் பெற்று ஏகினர். - - சிற்றம்பலத்தின் இதயத்தின் இதயம் சதா சாரதா சாரதா என்றே உச்சரித்துக் கொண்டிருந்தது. சாரதா நீ இருந்த இடம் என் நெஞ்சில் உனக்காகவே என்றென் றும் காத்துக் கிடக்கும்!" + இரு பாதிரிமார்கள் வந்தார்கள். ஒருவருக்கு இல்லறத்தில் இருக்க அனுமதி. மற்றவருக்குத் துறவுதான் விதி.