பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

í fj0 மகாத்மா காந்திக்கு ஜே! அவரது விழிவரம்புத் துளிகளை ராணி துடைத்தாள். அவளது கண்ணிரைத் துடைக்கும் பாக்கியம் அவருக்குக் கிடைத்தது. - நாட்குறிப்பின் அன்றையத் தேதியிட்ட தாளில் சிற்றம்பலம் கீழ்க் கண்டவாறு குறிப்புகளை எழுதி யிருந்தார். "ஈசனே!...சோதனைகள் இல்லையென்றால் உன் சுயரூபம் தெரியாதா எனக்கு?...எனக்கு நான்தான் எல்லாம். இது முதல் அங்கீகாரம். அப்புறம்தான் நீ!...என் கொள்கையின் பலம் தான் என்னை இத்தனை காலமாகக் கட்டிக் காத்தது, இனி...இனிமேல்...உன் சோதனை என் பேரிலே வின்ளையாடத் தொடங்கிவிடும்!... என் ராணியை நீ அறிவாய், அவள் இருபது வயசுப் பெண். அவளது மங்கல நாணைக் காக்கும் பொறுப்பில் இப்போது உனக்குத்தான் பெரும்பங்கு வந்து விட்டிருக்கிறது...தெய்வமே! என் ராணிக்கு மாறாத சிரிப்பையும் மாற்ற முடியாத நெஞ்சுரத்தையும் அருள்!...என்னை நீ அறிவாய். எல்லாம் கடந்தவன் நான் எல்லாம் கொண்டவனும் நான்தான்!” i 0 உயர்திரு சிற்றம்பலம் தம்பதி எங்கெங்கோ தேன் நிலவுப் பயணம் போய் மீண்டனர். எங்கெல்லாமோ கேத்திராடனம் போய்த் திரும்பினர். ஊர்ப் பத்திரிகைகள் அதிசயம்-ஆனால் உண்மை’. என்ற பகுதியில் மேற்படி செய்திகளைக் கட்டம் கட்டி வெளியிட்டுப் பணம் சம்பாதித்தன. - - அன்று ராணி படுக்கையை விட்டெழுந்ததும், வாந்தி எடுத்தாள். அவரோ ரிளிவரைக் கையில் எடுத்தார்.