பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 17 f அப்போது 'ஐயா!' புதிய குரலொன்று எதிரொவித்தது. எல்லோரும் பார்ல்வைகளைத் திசைமாற்றினார்கள். யாரோ ஒரு பண்டாரம் மொட்டைத் தலையும் திருநீற்றுப் பூச்சும் ருத்திராட்ச மாலையும் பொலியக் காட்சி தந்தார். r "யோவ் இது ஆண்டி மடம் இல்லே; கோயில் மடம்: இங்கிட்டுப் பிச்சை போட மாட்டாங்க ஊருக்குள்ளே போய்ப் பாருங்காணும்' - கடுக்கண்-வைரக் கடுக்கன் ஆயிற்றே! அது ஏழரைக் கட்டைச் சுருதியில் ஆணையிட்டது. - அந்தப் பண்டாரம் ஏன் அப்படிச் சிரிக்க வேண்டும்? உலகாளும் ஆண்டவனே ஒரு கட்டத்திலே ‘பிச்சை ஆண்டி"யாக வேடம் புனைய நேர்ந்த விதியை நினைத் திருப்பாரோ? ,' s ஒதுவார் மலைத்தார். ஐயா, பிச்சைக்காக நான் இப்போது இங்கே வந்து திற்கவில்லை!" . . . . . . . . பின்ன்ே?" "இங்கே சுவாமிக்குப் பூஜை பண்ணுகிற ஒதுவார் ஒருத்தர் இருக்காராமே. அவர் யார்? எங்கே இருக்கார் அவர்?' என்று விசாரித்தார் ஆண்டிப் பண்டாரம். ' 'ஏன், நான்தான்!” என்று சொல்விக் கொண்டே முன்னே வந்தார் ஒதுவார். பண்டாரத்தைக் கூர்ந்து பார்த்தார். ஏக்கமும் ஏமாற்றமும் நிழலிட, சுவாமி களே, சுவாமி சந்நிதியிலே இப்படி உட்காருங்க' என்று உருக்கமாக வேண்டினார், "என்ன விஷயமுங்க, ஐயா?" ன்ன்று கேட்டார். விளக்குடையான் கழலடியில் நின்ற தூண்டாமணி :விளக்குச்சுடர் தெறித்தது. - - பண்டாரம் திருவாய்மலர்ந்தார்: "ஐயா, இவ்வூரைச் சேர்ந்திருந்த அம்பலவாணன் செட்டியார் என்பவர் தம்