பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 17.3 பண்டாரத்தின் விழிகள் பொங்குகின்றன. ひQ ၀ိဂုံး - go அன்றைக்குத்தான் பிட்டுக்கு மண் மண்டபப்படி விழா. அம்பலவாணன் செட்டியார் மரபு காத்து நடத் தும் இத் திருநாள் வைபவத்துக்கு விசேஷமாகக் கூட்டம் கூடுவது வழக்கம். மேளக் கச்சேரி, பிட்டு, சர்க்கரைப் பொங்கல், கடலைப் பருப்புச் சுண்டல், தாம்பூலம், தேங் காய் மூடி என்று அன்று தடபுடலாகவே உபயங்கள் எல்லாம் நடந்தேறும். தெய்வம் தந்தது என்னோட சொத்து. அந்தத் தெய்வத்துக்கு விமரிசையாய் மண்டபப் படி செய்கிறதிலேதான் என்னோட மனச்சாட்சி அமைதி காணும்; அதுதான் என் மனசுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கும்; கொடுக்கவும்முடியும்' என்பர்செட்டியார். அப்படிப்பட்ட மெய்ப் பக்தரான அம்பலவாணர் இல்லாமலேதான் அவர் மண்டப்படி விகேஷம் நடைபெற வேண்டுமென்று விதித்துவிட்டதா என்ன? - த ஒளி வெள்ளத்திலே கூட்டம் நிரப் பு o வழிந்தது. - - ஒதுவார் ஏக்கம் தேங்க, சோகம் பாகமிட, மெய் யொடுங்கி, மெய் விதிர்த்துப் போய்விட்டார். அப்பனே' ஏன் இப்படிச் சோதிச்சிட்டே? இதோ, தீபாராதனை நடக்கப் போகுதே! உன்னை அல்லும் பகலும் அனவரத மும் துதித்துக்கொண்டிருக்கப் பழகிவிட்ட அம்பல வாணன் செட்டியாரை மறந்திட்டியா? இல்லை, மறக்கப் போறியா? உன்னை மறக்காத அவரை நீ மறந்தால், மறக்க நேர்ந்தால் அது தருமமாகுமா, நியாயம்ாகுமா? சொல், அம்மையப்பா! நெஞ்சம் நெக்குருகியது: உருகிக குலைந்தது; குலைந்து விம்மியது. விம்மி வெடித்தது. திருப்புகழ் பாடிக் கொண்டிருக்கிறது. நாகசுரம். 'அணித்த மறத் திருப்பொதுவில் விளங்கு நடத்தரசுக்கு இன்றைக்குப் பிட்டுக்கு மண் சுமந்த வ்ேடம்-புனை வடிவ அதாவது, அவதாரம் பிட்டும் மண்ணும் கதை அல்லவே! - - - - -