பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் I 7. "அப்படியெல்லாம் ஒண்னும் இல்லேங்க; நீங்க தல்லதைத்தான் செய்வீக; அதிலே, நாயமும் கட்டாயம் இருக்கும்; ஆனபடியினாலே, கங்காணியையே உங்க மனசுப்படி விழாவை நடத்தித் தரச் சொல்லுங்க!” பற்பல குரல்கள். ஒரே குரலாக ஒருங்கிணைந்து, ஒருமைப் பட்டு ஒலித்தன. சரி, சரி. காரியங்களைச் செஞ்சுக்கிட்டிருங்க; பசியாறிட்டு ஒடியாரேன். எங்க வீரமணி இப்பவாச்சும் திரும்பியிருப்பானோ, என்னமோ? சரி, சரி. நான் வரேன்!-புறப்படலானார் சேரித் தலைவர். Q. d o GG go oo: வட்டிற்சோறு ஆவி பறக்கிறது: அகல் விளக்கின் சன்னமான ஒளியில், ஆவியின் புகை சன்னமாகச் சுற்றிச் சுற்றி அலைகிறது. 'உருட்டின் சோத்துக் கவளத்தை லபக்னு வாயிலே போட்டுக்கிடாம, நேரங்கெட்ட இம்மாம் பொழுதிலே கூட சொப்பனம் கண்டுக்கிட்டே இருந்தாக்க, அப்பாலே, .ஒங்க மேனி என்னாத்துக்கு ஆகுமாம்?-அங்காளம்மை உரிமை பூண்ட உறவில் வருந்தினான். வாழ்க்கையே சொப்பனம்தான் அப்படின்னு ஒரு சித்தர் பாடியிருக்கார்; அந்தச் சொப்பனத்தையே வாழ்க்கையாக்கி விளையாட வேணும். விளையாட்டுக் காட்ட வேணும்னுதான் நான் சதா சொப்பனத்திலே மூழ்கிக் கிடக்கேனாக்கும்!” - சோறறுக் கவளங்கள்.விரைந்தன. தண்ணிர்க்குவளை காலி. கச்சப் பொடிக் குழம்புக்கு உப்பு திட்டம்தானுங் களே, மச்சான்காரவுகளே?’