பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 27 உண்மைக்கு அசலான, அச்சான இன்னொரு பெயர் தான் வாழ்க்கை! ஆகவேதான், வாழ்க்கைக்கு உண்மை... உண்மை. நிலை ஜீவநாடியாகவும், ஜீவகீதமாகவும் அமைந்திட வேண்டுமென்பது விதியாகவும் விதியின் விதியாகவும். அமைகிறது; அமையவும் வேண்டும்! உண்மை கொடிகட்டிப் பறந்திடவும் சத்தியமும், தருமமும் ஆனந்தக் கும்மி கொட்டிடவும் வாழ்ந்து காட்டத் துணிந்தவன்தான் பூங்காவனம்! ஏழ்மைக்குப் பிரதிநிதிதான். இருந்தால் என்னவாம்?... அவன் மனம் விலைமதிக்க முடியாத சொக்கப் பச்சையாக அமைந்து விட்டதே: போதாதா? போதும் என்கிற மனம் அமைந்ததே அவளுக்குக் கிட்டிய பூர்வ ஜன்மப்புண்ணியம் தான்! ஆனாலும், அந்தப் புண்ணியத்தை மண்ணைக் கவ்வச் செய்யத் துணிந்த பாவப்பட்ட சோதனைகள் ஒன்றா, இரண்டா? குளமங்கலம் மண்ணுக்குக் குடிக்காணியாட்சிப் பாத்தியம் கொண்டாடிக் கொண்டிருந்த ஆண்பிள்ளைச் சிங்கம் வீரமுத்து, கண்டிக்கங்க்ாணி கனகமுத்துச் சேர்வைகாரரின் பேரப்பிள்ளையாண்டான் என்னும் உறவையும் உரிமையையும் சவால் விட்டு, மெய்ப் படுத்திக் காட்டுபவன் மாதிரி, தன் முறைப் பெண்ணான அத்தை மகள் பூங்காவனத்தை அடைந்திட ஒற்றைக்காலி லேயே தவம் செய்யலானான்! ஆனாலும், சூரப்புலி வீரமுத்துவை விடுதலைப் புலியாக-அதாகப்பட்டது, சூரத்தனத்திலிருந்து விடு தலை செய்யப்பட்ட வெறும் புலியாக ஆக்கி வேடிக்கை பார்க்கவும், வேடிக்கை காட்டவும் புரட்சித் தமிழச்சி யாகவே பூங்காவனம் அமைந்து விட்டாள். - முடவன் எவனுமே கொம்புத்தேனுக்கு ஆசைப்படப் 'புடாது என்கிற அனுபவச் சட்டத்தைக்கூட புரிஞ்சுக்