பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 31 போட்டு வச்சுக்கிடு. ஆமா. செப்பிப்யூட்டேன்! உன்னோட ஆசையான, நேசமான மச்சான் உயிரைப் பலி வாங்காமல், நான் நல்ல தூக்கம் துரங்கவே மாட் டேன்! இது சத்தியமான சத்தியமாக்கும் நீ இல்லாமல், நான் இந்த மண்ணிலே முழுப் பைத்தியமாகிட்ட அநியாயத்துக்குப் பழிக்கும் பழி வாங்காமல் தப்புலேனா நான்? நான் எப்பவுமே சூரப்புலியேதான்!” - . புண்ணியத்தாலி ஊசலாடியது. ိ ထိို & உதயசூரியனைக் கண் காணாமல் செய்த பெருமை யில், வெய்யில் சூடேறிக் கொண்டிருக்கிறது. "ஐயையோ.. எந்தெய்வமே!’ அலறிக் கதறிக் கொண்டே, தலைவிரிகோலமாக ஒடோடி வந்தாள் பூங்காவனம் நெற்றிக்கு மகிமை சேர்த்த மீனாட்சி குங்குமம் சன்னம் சன்னமாகக் கரை கிதது; கரைந்து கொண்டிருக்கிறது. கொண்டைப் பூக்கள் கெண்டை மீன்களாகத் துவண்டு வீழ்கின்றன; ரத்தமும் ரணமுமாகிக் குற்றுயிரும் குலை உயிருமாகப் பேச்சு மூச்சில்லாமல் வெறும் பினக் கணக்கிலே கண்மூடிக் கிடந்த சிங்காரவேலனின் பாதங்களிலே நெடுஞ்சாண் கிடையாகச் சரணடைந்தாள். ரத்தக்கண்ணர் மடை உடைகிறது. மடையை உடைக்கிறது. - அழகான முகம் முழுவதிலுமே அடிபட்ட ரணங்கள் பளிச்சிட்டன. நெற்றிப் பொட்டுக்குமேலே மண்டை பிளந்து விட்டாற்போன்று எலும்புகள் திமிறித் தெறித்தனர். மூச்சிறைக்க ஓடி வந்த நாட்டு வைத்தியர் நிதானம் காத்து, அழகுச் சிங்கம் சிங்காரவேலனின் நாடியைச்