பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்தா ஒன்று கங்குல் தாய் கருநிறத் துகிலெடுத்து, அதைத் தொட்டிலாக்கி உலக மக்களைப் படுக்கவைத்துத் தாலாட்டுப் பாடிக்கொண்டிருந்த வேளை அது. பலருக்கு உறக்கம் பிடித்தது; சிலர் கொட்டாவிகளை எண்ணிக் கணக்கிட்டுப் பிரித்துக் கொண்டிருந்தனர்; எஞ்சியவர் களுக்குத் துக்கம் வேம்பானது. இந்தக் கும்பலில்தான் அவளும் சேர்த்தி, அவள் என்றால் மட்டும் போதுமா-போதாது. அவளுக்கும் பெயர் ஒன்று உண்டு. பெய்ர் சூட்டும் நிகழ்ச்சி ஒரு விழாவாக அமையாமற்போனாலும், அந்தப் பெயரை அவளுக்கு இட்டு அழைப்பதற்கு பெற்றோர் எவ்வளவோ காலம் காத்துத் தவம் கிடந் தார்கள். பொறக்கப்போறது ஆண் குஞ்சாக இருக் கோனும், ஆதி பிரமர் சாமியே! என்ற அவர்களது வேண்டுதலை பலிக்கவில்லை; ஆனால் பிறந்த பெண் குழந்தை மூக்கும் முழியுமாக இந்த மண்ணில் முதற் குரல் கொடுக்கத் தவறவில்லை. அவள் பெயர் என்ன தெரியுமா? பொன்னரசி! பெயரைச் சொல்லும் உதடுகளில் கற்கண்டுச் சுவை வழி црт—3