பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆவை எஸ். ஆறுமுகம் 39 அவளும் நெஞ்சு வெடிக்க விம்ம்லானாள். துயரம மண்டிய ஒலத்தினின்றும் பிரிந்து தெரிந்த அந்தக் குழந்தையின் கதறல் அவளுடைய நெஞ்சின் அடித்தளத் தில் சம்மட்டியாக இறங்கியது. பொன்னரசி துடித்தாள்! துவண்ட்ாள்; உயிர்ப்பு விடை பெற்றுவிடும் போல ஒர் உணர்வு கிளர்ந்தெழுந்தது. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்து உட்கார்ந்தாள். உடுத்திருந்த முன்றானைக்குள் அவளது மேனி ஒளிந்தது. திருக்கோகரணத்தின் தலை வாயிலில் இருந்த பழைய அரமனை அப்போதைய மணி பன்னிரண்டு என்று சொன்னது. பஸ் நிலையத்தில், இருந்தவள் கேட்டாள். அவலம் நிரம்பிய ஒலத்தில் சுருதி கம்மிப்பட்டிருந்தது. பொன்னரசி மெல்ல எழுந்து நடை பயின்றாள். ஆஞ்சநேயர் கோயிலைத் தாண்டிய இடத்தில் காணப் பட்டது இடிந்த சுவர்ப்பகுதி. அங்கிருந்துதான் அழுகை 'சிரித்துக் கொண்டிருந்த்தென்பதை உணாந்து கொண் டாள் அவள். பிரஹதாம்பாள் எனும் தெய்வத்தை எண்ணித் தொழுது வேண்டினாள்; மண்டியிட்டுத் தரை யில் உட்கார்ந்தாள. பச்சை மண் அது. அடுத்துப் படுத் திருந்த பெண் தான் குழவியின் அன்னையாக இருக்க வேண்டும். மூடு துணி எதுவுமில்லாமல் திறந்து கிடந்த தாய்மையின் இருபபிடத்திலே மதலைச் செப்புவாய் பற்றிச் சப்பிச்சப்பிப் பார்த்தது. பாலமுதம் சுரத்தால் தானே...? ஆகவேதான் தொண்டைக் குழியில் நோவு எஇக்கும் பயந்தம் ஆப்படிக் கத்தித் தீர்த்தது.அதுஅந்தப் பச்சைப் பாலகன், பெற்றவளுக்குக் குழந்தையை ஈன்ற கடமையுடன் செயல் முடிந்து விட்டது போலும்! அவள் தன் போக்கிலே ஆடாமல் அசையாமல் கண் வளர்ந்து கொண்டிருந்தாள். பொன்னரசி ஊர்பேர் அறியாத அந்த ஸ்திரீ மீது ஆத்திரப்பட்டாள்; தொட்டு எழுப்பினாள்; தட்டிக்