பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 51 எட்டு

  • 'அம்மா!...அம்மா...!" பொன்னரசி விழிகளை விரித்தாள். ஆலமரத்தடியில் யாரோ சிறுவனின் மடியில் தலைசாய்த்துக் கிடப்பதை உணர்ந்தாள். அவசரப்பட்டு எழ முயன்றாள். நெற்றி மேட்டிலிருந்து, வேதனை குரல் தந்தது. எழுந்தமர்ந்ததும், முதலில் தென்பட்டவை: பககத்தில் சிதறிக் கிடந்த ரத்தத் துளிகள்; துடிக்கும் இதயத்தோடு அந்தப் பையனை ஏறிட்டு நோக்கினாள். வழிந்த கண்ணிருடன் அவன், அம்மா, நீங்க பிழைச்கிட் உங்க...ஒரு மடக்கு காப்பித் தண்ணி குடியுங்க” என்று சொல்லிக் காப்பிக் குவளையை அவள் கரம் தொட்டு நீட்டினான். - -

பொன்னரசிக்கு மின் அதிர்ச்சி ஏற்பட்டது. அவ ளுடைய பெற்ற வயிறு என்றுமே அடைந்திராத அமைதி யைப் பெற்றது. மார்பகத்தில் பால் வெள்ளம் பாயத் துடிப்பது போலவும் உணரலானாள். இமை மூடாமல் அவனையே பார்த்தாள். பத்து அல்லது பதினொரு வயசான அச்சிறுவன் 'ராஜா' மாதிரி இருந்த்ான். செம்மறியாட்டுக் கும்பல் காரிக் கோலம் திகழ அவன் பின்னே அணி வகுத்திருந்தது. அவனது நெற்றிப் பக்கம் கூர்ந்து நோக்கினாள். அந்த இடத்தில் பெரிய தழும்பு காணப்பட்டது. ஆதி பிரமரே! இவனேதான் எம் மகனா...?. . . . - - - - தான் மயங்கிச் சுருண்டு புரண்ட நிகழ்ச்சி அப்போது தான் பொன்னரசிக்கு விளங்கியது. அவள், அவன் கதை யைக் கேட்டாள். -- "அம்மா, நான் அனாதை என்னைப் பெத்த ஆத்தர பிறந்தமேனியா என்னைக் காட்டிலே அனாதையா வீசிப் போட்டுப்பிட்டுப் போயிட்டாங்களாம்: శ.• . . வங்க என்னை வளர்த்து ஆளாக்கின்ாங்க்