பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 67 ருந்த நல்லக்கண்ணு பண்ட்ாரமும் சிவப்பிரகாச பண்டா ரமும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அனுசரணையாக 'ஊம் கொட்டிக் கொண்டே, நரைத்த தமது தாடியைத் தடவி விட்டுக் கைகளைப் பரப்பி மூட்டை முடிச்சுகளைத் தடுமாற்றத்துடன் தொட்டுப் பார்த்துக் கடைசியில் அவரவர்களுடைய ஊன்று கோல்களை இனம் கண்டு கொண்ட அமைதியில் மயிர்ச் செறிவைக் கடந்து, மங்கிய சிரிப்பைப் பரப்பி அமைதி கண்ட அந்த விசித்திரத்தைக் கண் கொண்டு பார்த்துப் பெருமூச்சு விடலானார் பக்பதி சுவாமிகள். மடத்தை ஒட்டிய ஒற்றையடிப் பாதை நெடுகிலும் குளித்து முழுகி, ஈரம் கொட்டிய நரை முடியை ஆறப். போட்ட வாறு சென்று கொண்டிருந்த பூங்கிளி, அந்த ஆண்டி மடத்தை உன்னிப்புடன் பார்த்து, ஒரு பொட்டுப் பொழுதுக்குத் தட்டுத்தடுமாறி நின்று, பிறகு காலடி எடுத்து வைத்து மறுகி நடந்து சென்ற விசித்திரம் ஏடு விரிந்தது. பசுபதி சுவாமிகள் மாயையின் கட்டறுத்துத் திரும்பலானார். - முருகன் கோயில் குரு பூஜையில் அளிக்கப்பட்ட அமுது, காட்டுக்கொன்று மேட்டுக்கொன்றாக விதியின் விளையாட்டுக்கு நேராகப் பிரிந்துகிடந்த முகம் அறியாத அந்தப் பண்டாரங்கள் அனைவரையும் ஒன்று கூடச் செய்த விந்தையை வியந்தார் பசுபதிப் பண்டாரம். சரி, எல்லோரும் சாப்பிடுவோமே!" 'ஹர ஹர! சம்போ மஹாதேவா ઈ. 3% တိ% இரவு கண் வளர்ந்து கொண்டிருந்தது; ஆனால், நில்வு மட்டும் விழித்துக் கொண்டிருந்தது. - - -