பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம் 83 அறந்தாங்கி-புதுக்கோட்டை பஸ், வீட்டைச் சுற்றி மடங்கியது. - எதை நினைப்பான்? எதை மறப்பான்? ஆனந்தனின் மேனி புல்லரித்தது. அந்தப் பதினோரு மாதங்களில் ராஜாவை அழைத்துக்கொண்டு இதே காரில் போய் குழத்தை ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் விசுவிடம் எத்தனை தடவை காண்பித்து மருந்து வாங்கி வந்திருக் கிறார்கள். விதிக்கு மருந்து இல்லையாம். வினைக்கும் மருந்து இல்லையா? தெய்வமே. எங்க ராஜா எங்கே: -மனம் அழுதது. ராஜா. எங்கே? ஏமாற்றமும் ஏக்கமும் புடைசூழ, நெற்றி நரம்புகள் புடைத்து நிற்க, நிலைக்காமல், நிற்காமல் அங்கும் இங்கு மாகத் தேடினான் ஆனந்தன்-சித்தபேதம் கொண்டவன் மாதிரி. - . "ராஜா." பாசம், கண்ணிராகப் பொங்கிப் புரள, கண்ணிர் பாசமாகப் பெருகி வழிய, வெறி கொண்ட பாவனையில் அலறினான் அவன். உயிர்ப்பதைப்புடன் ஒடோடி வந்தாள் சுசீலா. தாய் நெஞ்சம் தவித்தது. துடித்தது. புடவை முன்றானை நாசியை நாடியது. "அ த்தான், இட்டிலியைச் சாப் பிடுங்க!' என்று வேண்டினாள். .