பக்கம்:மகாத்மா காந்திக்கு ஜே.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 மகாத்மா காந்திக்கு ஜே: குணித்துக் குழை நக்கிய பிஞ்ஞகனாக நாளை உன்னைச் சந்திக்கின்றேன்...ஹஹ்ஹா. ஹஹ்ஹா!...' 'மறந்து விடாதீர்கள், உங்கள் சபதத்தை- . சூளுரையை-வாதத்தை... நடன ர்சிகர்கள் தீர்ப்புச் சொல்லட்டும்; நாளை விடியட்டும். துரைராஜன் நடனத் தில் சிறந்தவரா? இல்லை, பார்வதி சிறந்தவளா? அதோ, கையிலையங்கிரியிலே. வெள்ளைப் பனிமலை மீதிலே ஏன், அந்த அலகிலா விளையாட்டுடையானின் முகத்தில் கூட இந்தக் கேள்விகளுக்குப் பதில் பிரதிபலிக்கிறதே?... என் மாதா பராசக்திகூடச் சொல்லாமல் சொல்லி என்னை ஆகிக்கிறாளே, வெற்றி என் பக்கம்தானென்று: சந்திப்பொம், நாளை!...ஹஹ்ஹா ஹஹ்ஹா!...இந்தப் பார்வதிக்குத்தான் வெற்றி, வெற்றி!! வெற்றி!' အိဒီး 3. ကိ်ု "இந்தத் துரைராஜனைச் சுட்டெரித்து, அவன் சாம்பலைப் பூசிக்கொண்டுதான் நிற்கப் போகிறேன். அப்பொழுதுதான் நாட்டியம் நிறையும். ஆமாம்; வெற்றி எனக்கேதான்! நான் பார்வதியல்லவா? என் அகந்தையை அந்தச் சிவனேகூட மாற்றவோ, மாற்றுக் குறைக்கவோ முடியாது நான் பார்வதி!' - "நிஜமாகவா?” "ஆம். என்னுடைய அன்னைசக்தியின் மேல் ஆணை. இது மெய்யான சேதி, சகுந்தலா." அப்படியென்றால், நீ சோமநாதனைத்தான் க கொள்ளப்போகிறாயா? உனக்கு ந శే.