பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

296

அறத்தின் குரல்

மற்றவர்களும் போய் அவரவர்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டனர். துரியோதனாதியரிடமிருந்து தங்களுக்குரிய நாட்டை எவ்வாறு மீட்பது என்ற சிந்தனையே அப்போது யாவர் மனத்தையும் ஆட்கொண்டிருந்தது. அதைப் பற்றி யோசிப்பதற்காகக் கண்ணன் முதலியவர்களோடும் உபலாவியம் இடத்திற்குப் போய்ச் சேர்ந்தனர் பாண்டவர்கள்.

(விராட பருவம் முற்றும்)