பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/471

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

469


“அர்ச்சுனா! இதுதான் நல்ல தருணம். இதோ சயத்திரதன் வெளியே நிற்கிறான். கீழே விழாமல் அவன் தலையை அம்புகளால் கொய்து அப்படியே சமந்த பஞ்சகமடுவில் சந்தியாவந்தனம் செய்து கொண்டிருக்கும் அவன் தகப்பன் கையில் போய் விழுமாறு செய். இவன் தலை கீழே விழுந்தால் வீழ்த்தியவர்களுக்குத் துன்பம் நேரிடும்” என்று கண்ணன் இந்தச் சமயத்தில் கூறினான்.

“ஐயையோ! இருட்டி விட்டதே? என் சபதப்படி வேண்டும்? இனிக் கொல்வது முறைகேடல்லவா?” என்று பதறினான் அர்ச்சுனன்.

“பதறாதே! நான் சொல்வதைக் கேள். அவனைக் கொல் பொய் இருட்டை நீயுமா நம்புகிறாய்?” என்றான் கண்ணன். உடனே உண்மையைப் புரிந்து கொண்ட அர்ச்சுனன் வில்லை வளைத்துச் சயத்திரதன் கழுத்துக்குக் குறிவைத்து அம்புகளை எய்தான். மறுகணம் சயத்திரதன் தலையைத் தனியே அறுத்தெடுத்தான். அப்படியே அத்தலை சமந்தபஞ்சக மடுவில் மாலை நேர வழிபாடு செய்து கொண்டிருந்த சயத்திரதனின் தகப்பன் கையில் போய் விழுமாறு செய்தான். சயத்திரதனின் தந்தை தன் மகன் இறந்த துயரம் பொறுக்காமல் தானும் அந்த மடுக்கரையிலேயே உயிரை விட்டான்.

“ஆ! இதென்ன அநியாயம்? நிபந்தனையை மீறி இருட்டிய பிறகு சயத்திரதனை எப்படிக் கொல்லலாம்?” என்று கௌரவர்கள் ஆத்திரத்தோடு கத்திக் கொண்டே கண்ணனுடைய தேரை நெருங்கினார்கள். கண்ணன் தன் சக்கரத்தைத் திருப்பி எடுத்துக் கையில் வைத்துக் கொண்டான். உடனே வானில் சூரியன் பிரகாசித்தான். அதைக் கண்டு கெளரவர் திகைத்து வாயடைத்துப் போயினர்.