பக்கம்:மக்கட் செல்வம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14.

குழந்தையின் ஐம்புல நுகர்வு


அன்பின் செல்வி மங்கையர்கரசிக்கு,

இதுவரை குழந்தைப் பேற்றின் சிறப்புப் பற்றி இலக்கியங்கள் பாராட்டுவதை எழுதி வந்தேன். சென்ற வாரத்தில் எழுதிய இரு கடிதங்களிலும் கருவில் வளரும் குழந்தை பற்றியும் குறித்தேன். இன்று பிறந்த குழந்தை எப்படிப் படிப்படியாக உணர்வு பெற்று, கண்டு, கேட்டு, உற்று, உண்டு, உயிர்த்து வளர்கின்றது என்பது பற்றிச் சுருக்கமாக உனக்கு எழுதலாம் என நினைக்கின்றேன். இக் குழந்தையின் ஐம்புல வளர்ச்சி பற்றியும் அவற்றின் வழிபற்றி எழும் மன வளர்ச்சி பற்றியும் மேலைநாட்டில் எத்தனையோ பெரியவர்கள் எழுதியிருக்கிறார்கள். தமிழில் அத்தகைய நூல்கள் இல்லை என்றாலும் தற்போது ஒரு சிலர் அதுபற்றிய சிறு கட்டுரைகளும் சிறு நூல்களும் எழுதத் தொடங்க நினைக்கின்றனர்.